சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த விதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்காமல் இருந்து வருகின்றன.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு புறம் என்னை நிறுவனங்கள் இப்படி பெற்றோர் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்பதை பொதுமக்கள் யோசிக்காமல் இல்லை.
இத்தகைய சூழ்நிலையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த வித மாற்றமும் இல்லாமல் 102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது அதே போல ஒரு லிட்டர் டீசலின் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமில்லாமல் 94.24க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்ற 325 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.