fbpx

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிஹெச்டி பட்டதாரி அதிரடி கைது…..! சி.பி.ஐ நடவடிக்கை….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்து தமிழகத்தின் தஞ்சை சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க பிஹெச்டி பட்டதாரி ஒருவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். குழந்தை பாலியல் வன்கொடுமை குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தஞ்சையை சார்ந்த பிஹெச்டி பட்டதாரி ஒருவர் விற்பனை செய்து வந்திருக்கிறார். அதோடு, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து அவற்றை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ அவருடைய வீட்டில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக டிவியை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறந்த 4 வருடங்களாக ஒரு குழந்தையின் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர் ஒரு பெண் உட்பட 2 மனிதர்களை பாலியல் செயல்களை செய்வதற்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் தன்னுடைய கட்டளைகளை கேட்காதவர்களின் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் மிரட்டி இருக்கிறார், எனவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

மாநில வாரியான வாகனப் பாதுகாப்புத் தள திட்டம்...! மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு...!

Sun Mar 19 , 2023
வாகன தொழில் துறை தர நிர்ணய விதி 140-க்கு ஏற்ப, (ஏஐஎஸ்140) மேம்பாடு, தனி பயணாக்கம், செயலாக்கம் மற்றும் மாநில வாரியான வாகனப் பாதுகாப்புத் தள திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வடிவமைத்துள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 15, ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி, ஏஐஎஸ்-140 தர நிலைகளுக்கேற்ப மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச […]

You May Like