ஆதார் எண் என்பது இந்திய குடிமக்களின் தனிப்பட்ட அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளும் இந்த ஆதார் என்னை மையமாகக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதார் எண்ணில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களும் மிகவும் பாதுகாப்பானவை என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதுவரையில் இந்த ஆதார் சேவை மையங்களை மத்திய அரசே ஏற்று நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த ஆதார் தரவுகளை சரி பார்க்கும் ஒரு பை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஆதார் அடையாள அட்டையில் அதற்கு மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் விதமாக ஆதார் விதிகளில் மாற்றம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசன் சேவைகள் சென்று சேர்வதை எளிதாக்குவதற்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது.