fbpx

சொந்த மனைவி மற்றும் குழந்தையை 21 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவல்துறை அதிகாரி…! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை….!

நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருந்தாலும் கூட, நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க முடியாது என்பதன் அடிப்படையில் குற்றங்களை கண்காணிப்பதற்கு காவல் துறையை நியமனம் செய்தது.

இந்த காவல்துறையின் வேலை குற்றங்களை கண்காணிப்பதும், குற்றங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதும் தான். ஆனால் இந்த காவல்துறையில் இருக்கும் அதிகாரிகளே ஒரு சில சமயங்களில் குற்றங்களில் ஈடுபடுவது உண்டு.

அப்படி ஒரு சம்பவம் தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் பிலோதாவில் 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு விவசாயியின் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது இது தொடர்பாக தகவல் அறிந்த பிலோதா காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றை சோதனை செய்தனர்.

அந்த சோதனையில், அந்த கிணற்றில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. அதில் ஒரு பெண்ணின் கையில் ஹெச்.பி என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் பெயர் ஹசுமதி என்று கண்டுபிடித்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய கணவரும், காவல்துறை அதிகாரியுமான அரவிந்த் மார்டா தாமூர் என்பவரை காவல்துறையினர் விசாரித்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. அதாவது அந்த காவல்துறை அதிகாரி தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் உண்டான தகராறில் மனைவி மற்றும் தன்னுடைய 5 வயது குழந்தையை கொலை செய்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த காவல்துறை அதிகாரி மகள் மற்றும் மனைவியின் உடலை 21 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசி உள்ளார். இந்த செயலில் அவருடன் 2️ பேர் இணைந்து செயல்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக ஆரவள்ளி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த நிலையில் தான் குற்றம் சுமத்தப்பட்டவரான அரவிந்த் மார்டா தாமூர் அவர்களின் காவல்துறை அதிகாரி பதவி பறிக்கப்பட்டதுடன், அவருக்கும், அவருடன் இருந்த 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Next Post

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மும்பையை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கோவை இளைஞர் மீது வழக்கு பதிவு…!

Wed Jan 11 , 2023
தற்போதைய இளைஞர்கள் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கு வேண்டியதை பெண்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, பின்பு அந்த பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதற்கு முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது, ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி என்ற பழமொழி இருக்கின்றது. அந்தக் கூற்றின் அடிப்படையில், பெண்கள் அனைத்து விஷயங்களிலும் உஷாராக […]

You May Like