fbpx

மாபெரும் வெற்றி பாதையில் பொன்னியின் செல்வன் 2……! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா….?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியை சந்தித்த நிலையில், நேற்று இந்த திரைப்படத்தின் 2வது பாகம் வெளியானது.

முதல் ஷோவில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் வெற்றிப் பாதை பிரகாசமாக இருக்கிறது. திரைப்படம் சற்றே மெதுவாக சென்றாலும் நன்றாக இருக்கிறது என்று மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே இந்த திரைப்படம் 20 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் இது பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு என்று கூறப்படுகிறது.

Next Post

இறந்த மகளின் ஜீவனாம்ச தொகையை பெற தாய்க்கு உரிமை உள்ளது!... சென்னை ஐகோர்ட்!

Sun Apr 30 , 2023
இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத் தொகையை பெற தாயாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜீவனாம்சம் பெற வேண்டி சரஸ்வதி தொடர்ந்த வழக்கில், ரூ.6.22 லட்சம் வழங்க வேண்டும் என சரஸ்வதியின் கணவர் அண்ணாதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சரஸ்வதி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் ஜெயா மகளின் வழக்கை தொடர்ந்து நடத்தினார். முன்னதாக 1991ஆம் ஆண்டு அண்ணாதுரை மற்றும் […]

You May Like