fbpx

சொத்து தகராறு.. அண்ணியை அரிவாள் மனையால் வெட்டிய கொழுந்தன்..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் குடியிருப்பவர் காவேரி. இவரது கணவர் இறந்து விட்டதால் காவேரி பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது கணவரின் சகோதர, சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் காவிரியின் கணவரின் தம்பி சுப்பிரமணியனுக்கும், காவிரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு கைகளப்பாக மாறியதால் காவிரியை அங்கிருந்த அரிவாள்மனையால் சுப்பிரமணியன் வெட்டியதில், தலை மற்றும் கையில் காவிரிக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே அவரை அருகில் உள்ள வேப்பூர் மாற்றம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் காவேரி ஆபத்தான நிலையில் உள்ளதால், தற்போது பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் சுப்பிரமணியன் தனது அண்ணி காவிரியை அரிவாள்மணியால் வெட்டுவதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Baskar

Next Post

இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடனை கண்டுபிடித்த போலீஸ்..! சுவாரசிய சம்பவம்..!

Wed Jul 20 , 2022
ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை கைது செய்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் தற்போது சீனாவில் […]
இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடனை கண்டுபிடித்த போலீஸ்..! சுவாரசிய சம்பவம்..!

You May Like