fbpx

தேர்வு எழுதுவதற்காக வருகை தந்த மாற்று திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை…..! ஆசிரியரை போக்சோவில் கைது செய்த காவல்துறை….!

தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது திருப்புட்குழி அரசு மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடந்தது. இதில் முரசவாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி மாணவி அரியர் தேர்வை எழுதுவதற்கு தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாத் உதவி செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த மாணவிக்கு அந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் ஜெகநாத்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Next Post

பெண்களே ஷாக் நியூஸ்.. இன்று ஒரே நாளில் ரூ.360 உயர்ந்த தங்கம் விலை..

Thu Mar 16 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.43,400-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. எனவே தங்கம் விலை […]
gold

You May Like