நேற்று தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் அதோடு எமிஸ் இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பழைய காகித கோப்புகளை டிஜிட்டல் முறையில் மாற்றுவதுடன் நவீன முறையில் மடிக்கணினி மற்றும் கணினிகளை பயன்படுத்த வேண்டும் இதற்கு தேவைப்படும் பயிற்சிகளை வழங்க அரசு தயாராக இருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதோடு இதன் மூலமாக அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.