தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தின் எல்லோரின் கைகளிலும் கைபேசி பயன்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .ஆகவே கூகுள்பே, போன்பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகளும் அனைவரின் கைபேசிகளிலும் இருக்கிறது டீ குடித்துவிட்டு 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் கடைகளில் இருக்கின்ற OR கோடு அட்டை மூலமே ஸ்கேன் செய்து செலுத்துகிறார்கள் தற்போதைய தலைமுறையினர்.
அதேபோல சிறிய அளவிலான கிராமங்களில் கூட OR code அட்டை மூலமாக பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. இருந்தாலும் கூட தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்து விட்டு சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை இன்றும் நிலவுகிறது.
ஆகவே நியாய விலை கடைகளில் பணம் செலுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தநிலையில், தமிழக கூட்டுறவுத்துறை பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, அனைத்து நியாய விலை கடைகளிலும் கூகுள்பே மற்றும் பேடிஎம் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்யலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே மாதம் முடிவதற்குள் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் யூபிஐ மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது.