வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழே எடுத்து சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் இது வரும் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
நாளைய தினம் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஒரு 9ம் தேதி மற்றும் 10ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓர் ஒரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.