சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவருக்கு வேதவர்ஷினி மற்றும் பவானிஸ்ரீ(1) என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூத்தமகள் வேதவர்ஷினி அங்கிருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். தாய் சுதா, மகள் வேதவர்ஷினியை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டுள்ளார்.
அப்போது குழந்தை பவானிஸ்ரீயும் பின்னால் வந்ததை சுதா கவனிக்கவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளி பஸ்சின் பின் சக்கரம் குழந்தை பவானி ஸ்ரீ மீது ஏறியது. இந்த விபத்தில் குழந்தை பவானிஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சுதா கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவல்துறையினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.