fbpx

தாயை கடிக்க வந்த பாம்பை விரட்டிய சிறுவன் பலி.. தூத்துக்குடியில் நடந்த சோகம்..!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே குப்பணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் அர்ச்சனா. இவருக்கு ஐந்து வயதில் கார்த்தி என்ற மகன் உள்ளார். சம்பவம் நடந்த அன்று அர்ச்சனா வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நல்லபாம்பு வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் கார்த்தி, தாயை காப்பாற்றுவதற்காக விரைந்து வந்து பாம்பை விரட்டி இருக்கிறார். அப்போது பாம்பு சிறுவனை கடித்துள்ளது. வலியல் துடித்த சிறுவனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பாம்பிடம் இருந்து தாயை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

வரும் 24-ம் தேதி வரை மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்...

Sat Aug 20 , 2022
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை […]

You May Like