fbpx

மாணவிக்கு மாற்றி மாற்றி மிரட்டல் விடுத்த தம்பதி: தம்பதியினரை தட்டி தூக்கிய போலீசார்..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நெகமம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் அந்த  17 வயது மாணவி. இவரை அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்துவரும் 31 வயது இளைஞர் காளியப்பன் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,மாணவியின் பின்னால் காளியப்பன் சுற்றி வருவதாக அக்கம்பக்கத்தோர் அவரது மனைவி மகாலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, தனது கணவரை பள்ளி மாணவி காதலிப்பதாக நினைத்து மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப் படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளுக்கு மாறி மாறி தொல்லை கொடுத்த தம்பதியினர் குறித்து  பொள்ளாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஒரு நிலையில், காளியப்பன் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதும்,    அவரது மனைவி மகாலட்சுமி மாணவியிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப் படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அடுத்து காளியப்பன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Rupa

Next Post

மக்களே அடுத்த சிக்கல்...! வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு... தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்....!

Sun Jul 31 , 2022
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து நாளை விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தனது அறிவிப்பில்; இந்தியா முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள், நாளை தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை 2023-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகப்பெரிய பணியாகும். […]

You May Like