fbpx

விழுப்புரம் அருகே…..! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு…..!

விழுப்புரம் மாவட்டம் கடந்த 13ஆம் தேதி மாலை கள்ளச்சாராயம் குடித்து 70க்ஜ்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். எல்லோருக்கும் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டதன் காரணமாக, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட தலைமையின் மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்க பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மெத்தனால் விற்பனை செய்தவர்கள் என்று 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களில் ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்ப நிலையில் 58 வயதான கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதன் காரணமாக, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான உடைந்து எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. சிகிச்சை பெற்று வரும் 42 பேரில், 15 பேருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

Next Post

செம குட் நியூஸ்..!! மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை..!! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Sun May 21 , 2023
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில், ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அவ்வபோது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதோடு ரயில்வே நிர்வாகம் சார்பில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலத்தில் அந்த சலுகைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா முடிவடைந்து மீண்டும் ரயில்கள் பழையபடி இயங்கிய நிலையிலும் மூத்த […]

You May Like