தமிழக ஆளுநர் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதும் அதற்கு தமிழக அரசு மற்றும் மற்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர் கதையாக நடைபெற்ற வருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் ஆளுநர் சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வராத கோவில்.
2022 ஆம் வருடம் சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும நேர்கோடு தீர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தங்களுடைய குழந்தைகள் வயது வருவதற்கும் குழந்தை திருமணம் செய்வதாக கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவ்வாறு குழந்தை திருமணம் எதுவும் நடைபெற வில்லை அதேபோல 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் அந்த குழந்தைகளை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்தனர். இதனால் அவர்கள் சிலர் தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இது தொடர்பாக தான் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன் இப்படி இருக்கும்போது அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று எப்படி நான் சொல்வேன் என்று கூறியுள்ளார். ஆகவே தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அந்த நோட்டீஸில் குழந்தைகளுக்கு கன்னித்தன்மை சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக டிஜிபி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உறவினர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், திருமண குற்றச்சாட்டுக்கள் வைத்ததாகவும், கன்னித்தன்மை பரிசோதனை செய்ததாகவும் இதன் காரணமாக, சில சிறுமிகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பரப்பப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.
இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் வந்த நிலையில், அதன் உண்மை தன்மையை அறிந்து கொண்ட பின்னர் அதற்கான ஆதாரங்களை ஒன்று திரட்டி பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்களில் சட்ட ஆலோசகரின் அறிவுரையின்படி இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அந்த சிறுமையை தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்று சொல்வது பொய்யான தகவல் அது போல நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறார்.