fbpx

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி….! தொடரை வெல்லுமா இந்திய அணி…..?

இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது இதன் காரணமாக தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.

இத்தனை சூழ்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு 2 அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சி ஈடுபட்டார்கள்.

இன்றைய ஆட்டத்தின் வெற்றி தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு அவசியமானதாக இருக்கும். அதே சமயம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து போன ஆஸ்திரேலியா அணியினர் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஒரு நாள் தொடரை தன் வசமாக்க முயற்சி செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

Next Post

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு..!! கால அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Wed Mar 22 , 2023
ஆதார் எண் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தேர்தல் விதிகள் திருத்த சட்டம் 2021ன் படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் தகவல்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 2021 ஆகஸ்ட் 1ஆம் தேதி […]

You May Like