இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது இதன் காரணமாக தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.
இத்தனை சூழ்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு 2 அணி வீரர்களும் நேற்று தீவிர வலை பயிற்சி ஈடுபட்டார்கள்.
இன்றைய ஆட்டத்தின் வெற்றி தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு அவசியமானதாக இருக்கும். அதே சமயம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து போன ஆஸ்திரேலியா அணியினர் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஒரு நாள் தொடரை தன் வசமாக்க முயற்சி செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.