உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில். இயங்கி வந்த தனியார் பள்ளியில் 22 வயது இளம்பெண் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியின் இயக்குநர் தனது அறையில் வேலை இருப்பதாக கூறி அந்த ஆசிரியையை அவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்தப் பெண் குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அவர் அதை குடித்த பின்னர் தான் அவருக்கு அது மயக்க மருந்து என்பது தெரியவந்திருக்கிறது.
அந்த ஆசிரியை மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த பள்ளியின் இயக்குனர். அந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார். அவருக்கு தேவைபடும் போதெல்லாம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த ஆசிரியை யாருடனும் அதிகம் பேசாமல் தனியாக இருந்திருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்ததும் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை திடீரென்று காணாமல் போனதால் பள்ளியின் இயக்குனர் தான் அவரை கடத்தி விட்டதாக எண்ணிய பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செல்போனில் இருந்து வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையில் காணாமல் போன ஆசிரியை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.