தமிழக அமைச்சரவையில் இருந்து பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டால் அவரால் இன்னும் ஏராளமான விஷயங்கள் வெளியாகும் என்பதால் அவரை நீக்காமல் துறை மாற்றம் மட்டும் செய்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இன்று சேலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசியல் ஊழல் தொடர்பாகவும், நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெளிவாக கூறியிருக்கிறோம்.
அவர் இதில் கவனம் செலுத்தி வருகிறார். என கூறியுள்ள அவர், டிடிவி தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஒன்றிணைந்தது தொடர்பாக பேசி உள்ளார். அதாவது, துரோகியும் துரோகியும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். தினகரனின் கூடாரம் காலியாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.