fbpx

காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய பெண்… பரபரப்பு வாக்குமூலம்..!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் வசிப்பவர் மகேஷ் (30) இவருக்கும் ஷில்பா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் நடந்தது. மகேஷ், ஷில்பா இருவரும் கோனேகுண்டே என்ற பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஷில்பா ஆண் நண்பர் ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த விஷயம் கணவர் மகேசுக்கு தெரிந்தவுடன் இதுபற்றி மனைவி ஷில்பாவிடம் கேட்டுள்ளார். ஷில்பாவும் நண்பர் என்று கூறி சமாளித்து இருக்கிறார்.

இது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு உண்டானதால் அடிக்கடி சன்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில்,ஷில்பா கடந்த இரண்டாம் தேதி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு வலிப்பு நோயால் மகேஷ் இறந்து விட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும், கார் மூலம் மகேஷின் உடலை மண்டியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார். மகேஷின் பெற்றோர் வந்து பார்த்த போது மகேஷின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர்கள் மண்டியா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மகேஷின் உடல் கூறு ஆய்வு அறிக்கையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் ஷில்பாவிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் மகேஷை திருமணம் செய்து வைத்து விட்டனர். எனவை அவருடன் வாழ விரும்பாததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஷில்பா ஒப்புக்கொண்டார். வாக்குமூலத்தின் அடிபடையில் ஷில்பாவை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த காதலனையும் கைது செய்தனர்.

Baskar

Next Post

சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு நிற்காமல் சென்ற மணல் கொள்ளை மாஃபியாவின் 13 டிராக்டர்கள்... அதிர்ச்சி சம்பவம்..!

Mon Sep 5 , 2022
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் மணல் கடத்தல் கும்பல் செய்த ஒரு சம்பவம் நிர்வாகத்தையும், போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பை இடித்துவிட்டு நிற்காமல் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மணல் கொள்ளை மாபியாவுக்கு சொந்தமான 13 டிராக்டர்கள் மணல் ஏற்றிக்கொண்டு ஆக்ராவில் இருக்கும் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நிற்காமல் சென்றன. ஆக்ரா நெடுஞ்சாலையில் […]

You May Like