தற்போது இளைஞர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருவதால் இளைஞர்களிடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.
அதனால் சில பெற்றோர்கள் இந்த செல்போன் பயன்பாட்டை கண்டிப்பதால் இளைஞர்கள் பல சமயங்களில் விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்யாக்கரை பகுதியில் விவசாய மணி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ரகு இவர் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான் நண்பர்களுடன் பிரபு வெகு நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, இதனை பெற்றோர்கள் கண்டித்திருக்கிறார்கள்.
பெற்றோர்கள் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு நேற்று முன்தினம் தன்னுடைய படுக்கையறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பழம் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.