வளைகுடா நாடுகளில் பலத்த மழை என்பதையெல்லாம் நாம் கேல்வி பட்டிருக்க மாட்டோம். இங்கு பாலைவனங்கள் அதிகமாக இருப்பதால் கடும் வெயில் தான் இருக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு சொல்லமுடியாத அளவு உச்சத்தை எட்டும். அதே சமயம் மழை காலத்தில் லேசான மழை இருக்கும். சில சமயங்களில் நேரங்களில் கனமழை பொழியும்.
ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு நாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தற்பொழுது இந்த கன மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் வலைகுடா நாடுகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாட்டில் இருக்கும் வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் ஆகிய ஏழு அணைகள் திறக்கப்பட்டுள்ளன