கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெருநாய்க்கடியால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் இருக்கும் அரக்கிணறில் வசிக்கும் 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பினார். அப்போது அங்கு ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா இடங்களிலும் கடித்துக் குதறியது.
வெறித்தனமாக கடித்துக்குதறிய அந்த நாயிடம் இருந்து சிறுவன் போராடி தப்பித்து வீட்டிற்குள் ஓடினான். இதை தொடர்ந்து அந்த நாய் சிறுவனை விட்டுச்சென்றது. தற்போது சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.