fbpx

சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்: 8 மாதத்தில் 21 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெருநாய்க்கடியால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோழிக்கோட்டில் இருக்கும் அரக்கிணறில்‌ வசிக்கும் 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பினார். அப்போது அங்கு ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா இடங்களிலும் கடித்துக் குதறியது.

வெறித்தனமாக கடித்துக்குதறிய அந்த நாயிடம் இருந்து சிறுவன் போராடி தப்பித்து வீட்டிற்குள் ஓடினான். இதை‌ தொடர்ந்து அந்த நாய் சிறுவனை விட்டுச்சென்றது. தற்போது சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Baskar

Next Post

பேருந்தின் டயர் வெடித்து விபத்து - ஒருவர் பலி  .. கேரளாவின் மூணாறு செல்லும் பாதையில் பயங்கரம் . …

Mon Sep 12 , 2022
கேரள மாநிலம் மூணாறு அருகே பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூணாறில் இருந்த எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாக்கோச்சி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக அப்போது டயர் வெடித்துள்ளது. நிலை தடுமாறிய பேருந்து பமரத்தில் மோதி சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

You May Like