சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 3000 திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்திலைலேயே மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்க வந்த ஆம்புலன்சுகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது வரையில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் மாணவிகளுக்குதொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பதறி அடித்து மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.