fbpx

மாற்று திறனாளிப் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்… இளைஞர் கைது…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கும் தெத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்று திறனாளி பெண் சுமதி (35). இவருடன் கடந்த மூன்று வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் சுமதியும், விஜயகுமாருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயகுமார் உல்லாசம் அனுபவித்ததோடு இல்லாமல் சுமதியிடம் இருந்து மூன்றரை சவரன் நகை மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு லட்ச ரூபாயும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் விஜயகுமார் திருமணம் செய்ய மறுத்ததோடு குடும்பத்தினருடன் சேர்ந்து சுமதியை தாக்கியதாவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

Baskar

Next Post

தன் மீது தமிழக அரசு வாங்கிய ரூ.90,558 கடனை திருப்பி செலுத்திய திருச்சி இளைஞர்..!

Sun Sep 11 , 2022
திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் ‘தமிழன்’ பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக 90,558 ரூபாயை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து அதிரவைத்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சின்னராஜா செல்லதுரை. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர், சவூதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்த படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். […]
தன் மீது தமிழக அரசு வாங்கிய ரூ.90,558 கடனை திருப்பி செலுத்திய திருச்சி இளைஞர்..!

You May Like