தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சோதனை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.