தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடியில், குழந்தைகளின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 45 ஆயிரம் குழந்தைகள் இருதய ஓட்டை மற்றும் காதுகேளாண்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, கடுமையான பாதிப்பு மற்றும் நடுத்தர பாதிப்பு என இரண்டு வகைகளாக பிரித்து அவர்களுக்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.