fbpx

”மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்”..!! புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உருக்கமான பதிவு..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மயில்சாமி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985இல் வெளியான ”கன்னிராசி” திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும். சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இவர், பலகுரல் மன்னனாக திகழ்ந்தார். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர். அத்துடன் கொரோனாவால் பலரும் அவதிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தார்.

இந்த நிலையில், அவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு நேற்றிரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு செய்தியை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார். இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

பாலியல் வழக்கில் 4 நாளில் வெளியான அதிரடி தீர்ப்பு…..! மகிழ்ச்சியில் மக்கள்……!

Sun Feb 19 , 2023
பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாதிக்கப்பட்ட நபர்கள் மிக விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீதிமன்றமும் ஆண்டு ஆராய்ந்து நிதானமாக தான் தீர்ப்பு வழங்கும். ஆனால் அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் நமக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பதற்றம் இருந்து கொண்டே இருக்கும் தற்போது வரையில் நீதித்துறை இப்படித்தான் செயல்பட்டு இருக்கிறது. எந்த ஒரு வழக்கிலும் […]
’

You May Like