fbpx

அழுகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்…..! பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு சென்ற என்எல்சி ஊழியர்கள்……..!

கடலூர் மாவட்டம் வளையயமாதேவி கிராமத்தில் என் எல் சி அதிகாரிகள் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்ட போது ஒரு பெண் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு என்எல்சி கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று 4வது நாளாக என்எல்சி கால்வாய் வெட்டும் பணியில் அதன் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர் என்னுடைய நிலத்தை அளவீடு செய்ய நீங்கள் யார் உடனடியாக நிலத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின் அங்கு வந்த பெண் விவசாயி ஒருவர், என்எல்சியின் கால்வாய் அமைக்கும் பணியின் காரணமாக, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வாரிசுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி இருப்பதாகவும் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக, நில அளவை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அளவிடும் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு, அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

Next Post

வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தம் பணி….! குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!

Sun Jul 30 , 2023
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதன் அடிப்படையில், வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்தப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை சென்ற ஜூன் மாதம் ஆரம்பம் ஆனது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநில முழுவதும் 3️ […]

You May Like