மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) ஆகியவை விரைவுச் சாலையில் ஓடும் வாகனங்களின் டயர் தரத்தைப் பொருத்திப் பார்க்கத் தொடங்கியுள்ளன. நல்ல நிலையில் இல்லாத அல்லது தரமற்ற டயர்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 120 கி.மீ. வேக வரம்பு கொண்ட விரைவுச் சாலையில் சமீபத்தில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன. தீவிர சோதனையை மேற்கொள்வதற்காக ரோந்துப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், டயர் சோதனையில் தோல்வியுற்ற வாகனங்களுக்கு சலான் வழங்கப்படும் என்று MSRDC இணை நிர்வாக இயக்குனர் சஞ்சய் யாதவ் தெரிவித்துள்ளார்.
மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் சமீபத்திய சில விபத்துக்கள் ஓட்டுநர் தவறுகள் மற்றும் அதிவேகத்தைத் தவிர மோசமான வாகன நிலை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு கட்டமைப்பு சிக்கல்களாலும் விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை என்றும், “சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்ட சிறந்த தரமான நெடுஞ்சாலைகளில் ஒன்றாக” மும்பை-நாக்பூர் விரைவுச்சாலை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.