fbpx

’தமிழ்நாட்டில் அந்த வார்த்தையை யாரும் பயன்படுத்தக் கூடாது’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கைதிகளை, தற்காலிகமாக உரிய காரணத்தின் அடிப்படையில் சில காலம் விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும். தண்டனைக் கைதிகள் தங்களுக்கு விடுமுறை கோரி விண்ணப்பிப்பார்கள். தீவிர நோய்வாய்ப்படுதலால் அவசர சிகிச்சை பெறுதல், குடும்ப உறுப்பினர் இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சாதாரண, அவசர கால விடுப்பு கோரி விண்ணப்பிப்பார்கள். இந்த விடுப்புக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தருவார்கள்.

அந்த விடுப்பை சிறை அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். ஒருவேளை விடுமுறை தர மறுத்து விட்டால், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள். நீதிமன்றம், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களை ஆராய்ந்து மனிதாபிமான அடிப்படையில் பரோல் வழங்க உத்தரவிடும், அல்லது மறுக்கும். இந்நிலையில் மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள் உயர்நீதிமன்ற கிளையில் விடுப்பு கேட்டு பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”பரோல் என்ற சொல் தமிழ்நாட்டில் நீதிமன்ற நடைமுறையில் இல்லை. தண்டனை கைதிகள் தங்களுக்கு விடுப்பு கேட்கும்போது, பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடுகின்றனர். பரோல் என்ற வார்த்தையை அடிக்கடி மனுவில் குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில் தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின் படி பரோல் என்ற வார்த்தையும், பரோல் தொடர்புடைய விதிமுறைகளும் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படவில்லை.

மற்ற மாநிலங்களில் உள்ள விதிகளில் தான் பரோல் என்ற வார்த்தை உள்ளது. பரோலுக்கு என தனி வழிமுறைகள் உள்ளன. எனவே, தமிழக தண்டனை நிறுத்திப்புச் சட்டத்தின் படி பரோல் என்ற வார்த்தை பயன்படுத்த கூடாது. தமிழ்நாட்டில் தண்டனை கைதிகள், பரோல் வழங்க வேண்டும் என விடுமுறை கோர முடியாது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்ற இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் தண்டனை கைதிகள் மனு தாக்கல் செய்யும்போது பரோல் அடிப்படையில் விடுமுறை வேண்டும் எனக் கோரக்கூடாது என அறிவுறுத்தினர்.

Chella

Next Post

இந்த தவறுகளை எல்லாம் செய்து கொண்டிருந்தால் வீட்டில் எப்படி பணம் சேரும்..? இதை ஃபாலோ பண்ணுங்க..!!

Thu Dec 28 , 2023
உங்கள் வீட்டில் வாஸ்து தொடர்பான சில தவறுகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு நிறைய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் கடனில் மூழ்கலாம் அல்லது உங்கள் வீட்டிற்கு வறுமை வரலாம். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இதையெல்லாம் மீறி நீங்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லை என்றால் அதற்கு சில வாஸ்து தவறுகள் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் […]

You May Like