fbpx

10 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என அறிவிப்பு…!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும் முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளது. எனவே பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி செய்யும்‌ பொருட்டு மதிப்பெண்‌ சான்றிதழ், ஆதார்‌ அட்டை எண்‌, குடும்ப அட்டை எண்‌, கைப்பேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரி ஆகிய விவரங்களுடன்‌ மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ நாளன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது இ-சேவை மையத்தையோ அணுகி பதிவு செய்து கொள்ளலாம்‌.

மேலும்‌ https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம்‌ வழியாகவும்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும்‌ அனைத்து மாணவ மாணவியர்கள்‌ இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்‌ மேற்படி பதிவுகள்‌ மேற்கொள்ளும்போது அரசு விதித்துள்ள கொரானா வழிமுறைகளான சமூக இடைடுவளி பின்பற்றுதல்‌, முக்கவசம்‌ அணிதல்‌ மற்றும்‌ கிருமி நாசினி பயன்படுத்திட அறிவுறுத்தல்‌ போன்றவைகளை கடைபிடித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.

Also Read: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வந்து விபத்தில் சிக்கிய நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்…! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!

Vignesh

Next Post

ஆக்ரோஷமான சிங்கம்... தேசிய சின்னத்தை, பாஜக அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..

Wed Jul 13 , 2022
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் தேசியச் சின்னம் போடப்பட்டதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.. புது பாராளுமன்ற கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சிங்கம் மிகவும் ஆக்கிரோஷம் ஆக இருக்கிறது என்றும், பாஜகவினர் நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.. ஆனால் இந்த சின்னம் சாரநாத் தூணில் உள்ள சின்னத்தின் சரியான பிரதிபலிப்பு என்று கூறி பாஜக பதிலடி […]

You May Like