fbpx

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு…! போக்குவரத்துத்துறையில் மாற்றம்…! மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை…!

போக்குவரத்துத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, Gasoline-னுடன் எத்தனாலை கலப்பது, டீசல் வாகனங்களுக்கான எத்தனால் கலப்பு, பயோ டீசல், பயோ-சிஎன்ஜி, திரவமயமாக்கப்பட்ட இயற்கை வாயு, மெத்தனால், இரட்டை எரிபொருள், டி-மித்தேல் ஈதர், ஹைட்ரஜன் பேட்டரி வாகனம், ஹைட்ரஜன் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்தி உமிழ்வை மட்டுப்படுத்த இந்த அறிவிக்கை வகைசெய்யும்.

மேலும் மின்சார வாகனங்களை பயன்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய- மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களை புதுப்பிப்பதை ரத்து செய்யும் அறிவிக்கையும் இதில் அடங்கும்.

Vignesh

Next Post

அன்னாசிப் பழங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது.. இந்த ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..

Fri Mar 17 , 2023
பொதுவாக பழங்கள் என்றாலே நம்மில் பலருக்கும் பிடிக்கும்.. பெரும்பாலான மக்களின் விருப்பமான பழங்களில் அன்னாசிப் பழமும் ஒன்று.. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளது.. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மெலும் அன்னாசிப் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகப்படியான அன்னாசிப் பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் […]

You May Like