fbpx

’இனி நான் தான் எல்லாம்’..!! ஐகோர்ட் கிளையில் நித்தியானந்தா பரபரப்பு மனு..!!

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தானே அடுத்த மதுரை ஆதீனம் எனவும் நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே கூறியிருந்தார். அங்கிருந்து வீடியோ மூலம் சொற்பொழிவு ஆற்றி வந்தார். இந்நிலையில், நானே மதுரை ஆதீனம் என நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், “கடந்த 2012ஆம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார்.

இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த 2021இல் காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து, தற்போதைய மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Chella

Next Post

மக்களே கவனம்..!! இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

Tue Nov 7 , 2023
தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதனப் பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மழை, மின்னல், காற்று காலங்களில் பொதுமக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. மேலும், மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்துக்கொள்ள வேண்டும். […]

You May Like