fbpx

’இனி உங்க வீட்லயும் விசேஷம் தான்’..!! இந்த மந்திரத்தை இப்படி சொல்லிப் பாருங்க’..!!

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணத்திற்காக மணப்பெண் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. சில ஆண்களுக்கு திருமணத்திற்காக பெண் தேடினாலும், அவர்களுக்கான வரன் சரியாக அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவ்வாறு திருமணத் தடை இருக்கும் ஆண்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வருவதால், அவர்களுக்கு இருக்கும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். அவ்வாறான மந்திரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

திருமணத் தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்:

விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி திவ்ஷா ஜஷி

பத்னீம் மனோரமாம் தேஹி
மனோவ்ருத்தனு சாரீரம்
தாரீனிம் துர்கஸம்சார
ஸாரசய குலோத்பவாம்
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வ்ஷா ஜஷி

தினமும் காலை அல்லது மாலை பூஜை அறையில் சாமி படத்திற்கு முன் அமர்ந்து உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வந்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. செவ்வாய் தோஷத்தினால் திருமணத்தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்காத ஆண்கள், ஏழைப் பெண்ணுக்கு உணவு மற்றும் தங்களால் இயன்ற புத்தாடையை தானமாக வழங்கினால் திருமணத் தடை நீங்கி, உங்களுக்கான மணப்பெண் உடனே கிடைத்திடுவார்கள் என்பதும் நம்பிக்கை.

Chella

Next Post

’அடுத்த ஆப்பு டெல் நிறுவன ஊழியர்களுக்கு’..!! 6,500 பேர் பணிநீக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Tue Feb 7 , 2023
பொருளாதார நெருக்கடி காரணமாக ட்விட்டர், அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்து வரும் டெல் நிறுவனமும் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் DELL நிறுவனமும் இணைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் என்று நிறுவனத்தின் செய்தித் […]

You May Like