சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்போது, அதனை முழு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். வருகிற 25-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் 8-ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்.
இந்த கிரகணத்தை முன்னிட்டு ஒடிசாவில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் செவ்வாய்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25-ம் தேதி பகுதி சூரிய கிரகணம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தெரியும்.