fbpx

அக்டோபர் 25-ம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…! அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்போது, அதனை முழு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். வருகிற 25-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் 8-ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்.

இந்த கிரகணத்தை முன்னிட்டு ஒடிசாவில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் செவ்வாய்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25-ம் தேதி பகுதி சூரிய கிரகணம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தெரியும்.

Vignesh

Next Post

நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழை...! வானிலை மையம் அறிவிப்பு...!

Sun Oct 23 , 2022
நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு-வடமேற்கு திசையில் 110 கிலோ […]

You May Like