எந்தவொரு பழக்கமாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே அதை ஒதுக்கி விட கூடாது. சரியாக ஒரு வாரம், உங்கள் மனதிற்கு நேர்மையாக இப்படி பயிற்சி செய்து பாருங்கள்.
இன்றைய சூழ்நிலையில் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. இதனால் ஊளைச் சதை அதிகரித்து மிகக் குறைந்த வயதிலேயே ஒபிசியாக மாறிவிடுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இவற்றிற்கு மிக எளிமையான ஒரே தீர்வு நடைபயிற்சியே. தினமும் காலை, மாலை 8 வடிவ நடைபயிற்சியை வெட்ட வெளியில் மேற்கொள்வது மிகவும் காலையில் நல்லது. இதை முறைப்படி செய்து வர பலன்கள் கூடுவதைக் கண்கூடாகக் காணலாம். நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கில் இருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.
ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடங்கள் என தொடர வேண்டும். 8 வடிவ நடைபயிற்சியின் போது காலில் செருப்பு போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி நடந்தால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உள்உறுப்புகள் நன்கு செயல்பட்டு ஆரோக்கியமாக வாழலாம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதால் உடல் விரைவில் சரியாவதைக் காணலாம். 8 வடிவ நடைபயிற்சி பார்வைக் குறைப்பாட்டை சரிசெய்யும். கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறன் அதிகரிக்கும்.
தொடர்ந்து இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் சரியாகும். இது தவிர சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல பிரச்சனைகளுக்கு மிக எளிமையான தீர்வாக அமையும்.
Read More : நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! பதிவிறக்கம் செய்வது எப்படி..?