fbpx

தமிழகமே…! நாளை முதல் இந்த வாகனங்களுக்கு தடை… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…!

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தமிழகத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள்போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன.

இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.

அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும்சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார்வாகன துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டிஎன் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன. வரும் 14-ம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

English Summary

Omni buses with out-of-state registration numbers have been banned from plying in Tamil Nadu from tomorrow.

Vignesh

Next Post

இந்தியர்கள் இருவர் பலி எதிரொலி!. ராணுவ ஆட்சேர்ப்பை நிறுத்துங்கள்!… ரஷ்யாவிற்கு இந்தியா கோரிக்கை!

Wed Jun 12 , 2024
India Demands Russia: ரஷ்யா – உக்ரைன் போரின்போது 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியை அடுத்து ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுடனான போரி போது ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்தநிலையில், ரஷ்யாவின் இத்தகைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. ஏனெனில் இதுபோன்ற செயல்பாடுகள் எங்கள் […]

You May Like