மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆலோசானை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளும், டிசம்பர்-27ஆம் தேதி எம்ஜிஆர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமைக் கழக அறிவித்துள்ளது.