fbpx

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..!! விடுமுறை லிஸ்ட்டில் வந்த சென்னை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசிப்பதால், மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 2ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பதைபதைக்கும் வீடியோ…! முதலையின் வாய்க்குள் கைவிட்ட மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளர்…! ஒரே நொடி தான்…!

Mon Aug 28 , 2023
விலங்குகளை பொறுத்தவரை பொதுவாக கணிக்க முடியாத ஒன்று என்றே கூறலாம். நான்றாக பழகி கொண்டிருக்கும், ஆனால் சில சமயங்களில் தாக்குதல் நடத்தும், சமீபத்தில் வளர்த்த நபரையே ஒரு நாய் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இருந்தாலும் மக்கள் செல்லப்பிராணிகளை போல் பல விலங்குகளை வளர்க்கிறார்கள். இது பேராபத்தில் முடியும் என்பதை போன்ற செய்தியையும் நாம் கேள்வி பட்டிருப்போம். உயிரியல் பூங்கா காவலர்களுக்கும் இதே நிலைமை தான். விலங்குகளை பராமரிக்கும் மற்றும் […]

You May Like