fbpx

ஆன்லைன் சூதாட்டம்..! மக்களை திரட்டி போராட்டம்..! எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் குழு அறிக்கை அளித்த பிறகும், தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே, கடந்த மே 2ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த அம்பத்தூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம்..! மக்களை திரட்டி போராட்டம்..! எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

கோவை அரசு பொருட்காட்சியில் கடந்த 15ஆம் தேதி பணியில் இருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் காளிமுத்து 16ஆம் தேதி (நேற்று) உயிரிழந்தார். இவரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, கடன் வாங்கி விளையாடி, ஒரு கட்டத்தில் கடன் பிரச்சனையால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக செய்தி வந்துள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டம் உட்பட அனைத்து நாசகார செயல்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கையை திமுக அரசு உடனே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பாராசின் ஓபன் செஸ்..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பிரக்ஞானந்தா..!

Sun Jul 17 , 2022
பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா […]
FTX கிரிப்டோ கோப்பை செஸ்..! தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார் பிரக்ஞானந்தா..!

You May Like