fbpx

ஆன்லைனில் ஓட்டு போடும் வசதி..!! குடிபோதையில் பத்திரிகையாளர்களிடம் உளறிய ஜோதிகா..!! வெச்சி செய்த பயில்வான்..!!

நடிகை ஜோதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறி விட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, தனது புதிய படமான ஸ்ரீகாந்த் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடிகர் சூர்யா தனது தந்தை மற்றும் தம்பியுடன் ஓட்டுப் போட வந்த நிலையில், நீங்கள் மட்டும் வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒவ்வொரு வருஷமும் ஓட்டுப் போடுறேன். இந்த தடவை மிஸ் ஆகிடுச்சு” என்றார். உடனடியாக 5 வருடத்திற்கு ஒரு முறை தான் ஓட்டு போட முடியும் என பத்திரிகையாளர்கள் சொன்ன நிலையில், சற்று ஜெர்க்கான ஜோதிகா, “சாரி.. ஊரில் இல்லை, பர்ஷனல் விஷயம் காரணமாக ஓட்டுப் போட வரமுடியவில்லை” என பதில் அளித்தார். மேலும், ஆன்லைனிலும் ஓட்டுப்போடலாம் என்று அவர் கூறியது விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ”ஜோதிகா ஃபுல் போதையில் உளறினாரா என்று ஆரம்பித்து, சென்னையில் படத்தின் ப்ரோமோஷனுக்கு மும்பையில் இருந்து சென்னை பறந்து வந்தவர். விமானத்தில் பறந்து வந்து சென்னை விமான நிலையத்தில் தங்கிவிட்டு பேட்டியும் கொடுத்துவிட்டு மும்பைக்கு கிளம்பிவிட்டார். நான் முன்பே கூறினேன். ஜோதிகாவுக்கு சென்னை என்றாலே வேப்பங்காய் போல் கசக்கிறது. மாமனார், மாமியார் முகத்தில் முழிக்க கூடாது என்று மும்பைக்கே சென்றுவிட்டார்.

ஏன் ஓட்டு போட வரவில்லை என்று கேட்டதற்கு, வருடா வருடம் ஓட்டுப் போடுறேன் முக்கிய காரணங்களால் வர முடியவில்லை என்றும், ஆன்லைனின் ஓட்டு போட வசதி இருக்கு என்று சொன்னார் ஜோதிகா. வருட வருடம் தேர்தல் வருகிறது என்றும், தேர்தலில் ஆன்லைனில் எப்படி ஓட்டு போடலாம்னு யார் சொன்னா? அரசியலுக்கு வருவீங்களா? என்பதற்கு யாரும் கூப்பிடல இப்போதைக்கு இல்லை என்று கூறினீர்கள். ஒருவேளை யாராவது கூப்பிட்டால் போவீங்களா என்று பயில்வான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விஜய் அரசியலுக்கு வருவது ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லையா? அதனால் தான் அவுட் ஆஃப் டாபிக் என்று அந்த கேள்வியை புறக்கணித்தாரா? என்ன என்று பயில்வான் அந்த வீடியோவில் விளாசியுள்ளார்.

Read More : JOB | மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

தனது லுங்கியை அவிழ்த்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மானம் காத்த நபர்..!! சிவகாசி வெடிவிபத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

Fri May 10 , 2024
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு அறைகள் உள்ளன. நேற்று வழக்கம் போல 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இதன் அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, […]

You May Like