fbpx

ஒரே ஒரு பூஜை..!! இறந்த உங்கள் மனைவி மீண்டும் உயிருடன் வருவார்..!! வாலிபரை ஏமாற்றிய பூசாரி கொடூர கொலை..!!

மகாராஷ்டிர மாநிலம் மான்டவி பகுதியில் உயிரிழந்த தனது மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவர வேண்டும் என கணவர் விரும்பியுள்ளார். இதற்காக சிறப்பு பூஜை செய்ய பூசாரி ஒருவரையும் நியமித்தார். மனைவி உயிருடன் வரவில்லை எனில் பணம் வாபஸ் என்ற நிபந்தனையுடன் பூஜையும் தொடங்கியது. வெகு நேரமாகியும் அவரின் மனைவி உயிருடன் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கணவர் பூசாரியை கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரது மனைவி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், மந்திர பூஜைகள் மூலம் மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவர பூசாரி ரூ.2 ஆயிரம் வாங்கியுள்ளார். வியாழக்கிழமை அன்று மனைவி உயிருடன் வராத ஆத்திரத்தில் பூசாரி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூசாரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பூசாரியை கொலை செய்த கணவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. பூசாரியை கொலை செய்தவர் வினோத் (34) என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2017ஆம் ஆண்டு ஒரு வாட்ச்மேனை கொலை செய்த வழக்கில் வினோத் சிறைக்கு சென்றவர். கொரோனா காலத்தில் இவர் ஜாமீன் பெற்று 2 ஆண்டுகளாக வெளியே உள்ளார். இவரது மனைவி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த தனது மனைவியை மந்திரீக பூஜைகள் செய்து மீண்டும் உயிருடன் கொண்டு வர வேண்டும் என அந்த பூசாரியை அணுகியுள்ளார்.

பூசாரியும் இவரிடம் 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு பூஜைகளை செய்துள்ளார். மனைவி உயிருடன் வராத நிலையில், பூசாரியிடம் தகராறு செய்த வினோத், பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பூசாரி பணத்தை தராத நிலையில், ஆத்திரமடைந்த வினோத் பூசாரியின் தலையை கல்லின் மீது மோதி கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் வினோத்தை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி..!! ஆத்திரத்தில் ரயில் பயணிகளை அலறவிட்ட கணவர்..!! நடந்தது என்ன..?

Wed May 31 , 2023
தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதால் கடுப்பில் இருந்த கணவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலை அடுத்து பதறி அடித்துக் கொண்டு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில்வே நிலையத்தை அதிரடியாக சோதனை செய்ய, கடைசியில் அந்த வாலிபரை பிடித்த போது தான் உண்மை தெரியவந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் […]

You May Like