fbpx

”எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும்”..!! பிரதமர் மோடி அறிவுரை..!!

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்,சத்தீஷ்கர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் மோடி, ‘தோல்வியில் இருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்க வேண்டும்’ என அறிவுரை கூறினார்.

நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேர்தல் முடிவுகளை பற்றி நான் பேச வேண்டும் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் கட்சியினருக்கு இது பொன்னான வாய்ப்பு. குளிர்கால கூட்டத் தொடரில் தோல்விகளால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை காண்பிப்பதற்கு பதிலாக கடந்த 9 ஆண்டு கால எதிர்மறை போக்கில் இருந்து வெளியே வருதல், தோல்வியிலிருந்து பாடம் கற்பது, நேர்மறை எண்ணத்துடன் செல்வீர்களேயானால் நாடு உங்கள் (எதிர்க்கட்சிகள்) மீதான எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.

மக்கள் நலத்திட்டங்கள், நாட்டின் பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக கோயில் முக்கியமானது” என்று கூறினார்.

Chella

Next Post

தாயுடன் உல்லாசம்..!! எவ்வளவு சொல்லியும் கேட்காததால் விவசாயியை வெட்டி சாய்ந்த சிறுவன்..!!

Mon Dec 4 , 2023
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த பெரியானுர்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன் (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு வினோத்குமார் (25), வினோதினி (23) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது பைக்கில் சென்றிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு […]

You May Like