fbpx

எதிர்க்கட்சி To ஆளுங்கட்சி..!! எதுக்கு இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க..!! திமுக அரசை கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்..!! – ஜாக்டோ ஜியோ

தங்களது போராட்டங்களை திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆளுங்கட்சியானதும் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

எனவே, திமுக அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையிலும், கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, திமுக அரசின் இந்த செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை (மார்ச் 23) ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கோடை வெயிலுக்கு அடிக்கடி உங்களுக்கு இந்தப் பிரச்சனை வரும்..!! சமாளிப்பது எப்படி..? வீட்டில் இந்த பொருட்கள் இருந்தாலே போதும்..!!

English Summary

The JACDO-GEO organizations have announced that they will embark on a hunger strike tomorrow, condemning the DMK government’s indifference to their protests.

Chella

Next Post

இந்தியாவில் சுமார் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை!. இதைச் செய்தால் உங்கள் கணக்கும் தடை செய்யப்படும்!.

Sat Mar 22 , 2025
About 1 crore WhatsApp accounts have been banned in India! If you do this, your account will also be banned!

You May Like