சென்னை ஏழு கிணறு மிண்ட் தெருவைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ஹரிஷ் (17) இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக ஏழு கிணறு அம்மன் கோவில் தெருவில் இருக்கின்ற மாநகராட்சி பள்ளி அருகே கைபேசியின் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த மாணவனின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் இது தொடர்பாக எழுதினது காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன்படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், செல்போன் பைப்பில் ஈடுபட்டது. வண்ணாரப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமேஷ் (19) என்பவர் தான் என தெரிய வந்தது அதன் பேரில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவருடன் அவருடைய நண்பர் ஆன 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் குற்றச்சம்பழத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டனர்.
அதோடு விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் இணைந்து கடந்த 2ம் தேதி இரவு ஏழு கிணறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரத்தினம் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி ஆதில் சென்று செல்போன் பருப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு நடுவில் கைது செய்யப்பட்ட காமேஷ் உலகு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.