fbpx

அதிர்ச்சி…! பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்…! தலைவர்கள் இரங்கல்…!

பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்தியா மீது அதிக நாட்டம் கொண்டிருந்த டொமினிக் லாபியர், தனது 91வது வயதில் காலமானார். அவரது மனைவி டொமினிக் கான்சோன்-லாபியர், பிரெஞ்சு செய்தித்தாளான வர்-மாடினுக்கு அவர் காலமானதை உறுதிப்படுத்தினார்.”91 வயதில், அவர் முதுமையால் இறந்தார்,” என்று அவர் செய்தித்தாளிடம் கூறினார்.

டொமினிக் இனி துன்பப்படுவதில்லை என்பதால் தான் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருப்பதாக” கூறினார். ஜூலை 30, 1931 இல், சாட்லைலோனில் பிறந்த டொமினிக் லேபியர், இந்தியாவைப் பற்றி எழுதிய ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ மற்றும் ‘சிட்டி ஆஃப் ஜாய்’ போன்ற பல புத்தகங்கள் மில்லியன் கணக்கான பிரதிகள் விற்றன. இவர் பத்மபூஷன் விருதை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

அண்ணன் தற்கொலை செய்து கொண்டதால், கதறி அழுத தம்பியும் உயிரிழப்பு!!!

Tue Dec 6 , 2022
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(26). இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் தேர்வு எழுதி இருக்கிறார், அத்துடன் இவர் அருகே உள்ள தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் காதலித்த பெண்ணுக்கும், அவருக்கும் […]

You May Like