பிரபல பாடகி ராணி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் மெல்லிசை ராணி நய்யாரா நூர் பாகிஸ்தானின் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. புல்புல்-இ-பாகிஸ்தான் என்ற புகழ்பெற்ற பட்டம் பெற்றவர். பழம்பெரும் கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகளைப் இவர் பாடலாக பாடியுள்ளார்.
நவம்பர் 3, 1950 இல் இந்தியாவில் உள்ள கவுகாத்தியில் பிறந்த அவர் 1957 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். லாகூரில்தான் பேராசிரியர் அஸ்ரர் அகமது இவரின் திறமையைக் கண்டறிந்து இசை துறைக்கு அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர், நூர் முதன்முதலில் 1973 இல் கரானா திரைப்படத்திற்காகப் பாடினார். பாடகியின் மரணத்திற்கு இசை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர். பாகிஸ்தானின் பல முக்கிய தலைவர்கள் சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.