fbpx

இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது…! உடனே விடுதலை செய்ய வேண்டும்..! உச்ச நீதிமன்றம் உத்தரவு…!

இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். இம்ரான் கானை சுற்றிவளைத்த அதிரடிப்பபடையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் நாடு முழுவதும் பெறும் பதட்டமான சூழல் உருவாகியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என கூறியுள்ளது, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

ரூ.210 செலுத்தினால் ரூ.5,000 பென்ஷன் கிடைக்கும்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Fri May 12 , 2023
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால், உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்ஷன் திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தை 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி […]

You May Like