fbpx

பெற்றோர்களே உஷார்..!! 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்..!! கோவையில் அதிர்ச்சி..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே பீகாரை சேர்ந்த 12 வயது சிறுவனும் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் வீட்டில் யாருமில்லாதபோது, அங்கு சென்ற சிறுவன், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதுமட்டுமல்ல, இதை பற்றி யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

இதற்கிடையே, சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான், 12 வயது சிறுவன் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரியவந்தது. பிறகு, ஆத்திரமடைந்த பெற்றோர், கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் சிறுவனின் மீது புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் , சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இறுதியில், சிறுவன் மீது போச்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தவிட்டதை அடுத்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் இப்போது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தாயின் சடலத்துடன் நிர்வாணமாக படுத்த மகன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை.!

Fri Dec 15 , 2023
அமெரிக்காவை சார்ந்த வாலிபர் தனது தாயை தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கு மனநல பிரச்சனை இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஓசன் சிட்டி நகரைச் சேர்ந்தவர் ஜெஃப்ரி சர்ஜெண்ட். காவல்துறையை போனில் தொடர்பு கொண்ட இவர் தனது தாயை கொலை செய்து விட்டதாகவும் தன்னை கைது செய்யும்படியும் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் […]

You May Like