நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2023-2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் 27 அமர்வுகளாக 66 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையும் நடக்கிறது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடைவெளி விடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.